Wednesday, May 19, 2010

விநாயகர் நான்மணி மாலை


விநாயகர் நான்மணி மாலை என்ற தலைப்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் புதுவை மணக்குள விநாயகப் பெருமான் மேல் ஒரு நூலை இயற்றியுள்ளார். வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற நான்கு வித பா வகைகளில் பாடல்கள் புனைந்திருக்கிறார். மொத்தம் நாற்பது பாடல்கள் இந்த நூலில் இருக்கின்றன. மிக அருமையான கருத்துகள் பல இந்தப் பாடல்களில் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள் யாதெனினும்
சித்தி பெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தானே!
நின் தனக்குக் காப்புரைப்பார் நின் மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்பு நீயே.


சக்தியின் அருள் பெறும் பாக்கள் இயற்றுவதில் வல்லவர்கள் எந்தப் பொருளைப் பற்றி நூற்களை எழுதினாலும் அது நன்கு அமையும் படி வாக்கு வன்மை பெற தலைவனே உனக்கு காப்புச் செய்யுள் உரைப்பார்கள். உன் மீது இயற்றப்படும் இந்த நூலுக்கும் நீயே காப்பு.

No comments: