Sunday, August 23, 2009

பள்ளியிற் பிள்ளையார் சிந்தனை




எள்ளு பொரித்த பொரியும் இடித்தவல் தன்னிற்கலந்து
வள்ளிக்கிழங்கை திருத்தி வாழைப்பழத்தை யுரித்து
உள்ளியபாகு திரட்டி உண்ணும்படியே தருவோம்
கள்ளத்திருமால் மருகா கணபதி சப்பாணி கொட்டாயே

ஆறு தேங்கா யவல்தூணி அதற்கு தகுந்த எள்ளுருண்டை
நூறுகுடலை மாம்பழம் நொடிக்குமளவி லமுது செய்வல்ல பிள்ளாய்
ஆடல் பாடல் சங்கீதம்அடியேன் காண
நின்றாடாயே சண்டுபெருச்சாளி மீதேறிச்சடுகுடு என்ன உலாவி
இண்டை இளம்பிறை சாயஇணங்கிய கொம்பேரிண்டூத அண்டத்தமரர் துதிக்கஅடைக்கலங்காத்த பிரானாரே
குண்டைக்கணபதி நம்பிகுதங்கையாற் சப்பாணி கொட்டாயே

பொழுது விடிந்துபொழுதுபோய்திருமலை மேலேற வேண்டும்
ஏறிமலர்ந்துபூ கொய்ய வேண்டும்கொய்து திருமுடி சாத்தவேண்டும் சாத்தியே கைகட்டி நிற்க வேண்டும்நின்று திருவிளக்கேற்ற வேண்டும் ஏற்றி அரகரா என்ன வேண்டும்
ஐயா கணபதி நம்பி ஆயிரநாமமுடையாய்பொய்யில்லாத மெய்யுரைப்பாய் போனதெள்ளாம் தருவாய்வெள்ளித்தாம்பூலம் பூசி வைத்து வேண்டும்படியே யிட்டுண்டுபல்ளிற்கேற்ப நதவாய் பாக்கியம் செய்த பிள்ளாய்பிள்ளாய் பிள்ளாய் பேருடையீர் பிரமனெனும் பேருடையீர்பிள்ளைகள் தங்கள் பிரானாரே இருந்தீரே பிரானேரே
எங்கள் மனது கலங்காதோ பள்ளித்தடுக்கும் கையேடும்படிக்கும் சுவடியும் பரித்தெடுத்து துள்ளித்திரியும் கால்தன்னைசுகமே நிறுத்தும் பிரானாரே ஒடாதே ஒளியாதேஇட்டதே சோறும் பெற்றாதே கறியும் உண்டு
தூங்கி பூசை முடித்துவெள்ளிமுளைக்கப் பள்ளிக்கு வாரும்.