Thursday, September 18, 2008

வினாயகனே! வினை தீர்ப்பவனே!

வினாயகனே! வினை தீர்ப்பவனே! இதான் முதல்வன் வலைப்பூவில் முதல் பாடல்! சீர்காழியாரின் கன கம்பீர வெங்கலக் குரலில், பாடலை இங்கு கேட்கலாம்!
வினாயகனே!வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே! ஞால முதல்வனே!
(வினாயகனே)

குணா நிதியே! குருவே சரணம்!
குறைகள் களைய, இதுவே தருணம்!

(வினாயகனே)

உமா பதியே உலகம் என்றாய்!
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்!
கண நாதனே மாங்கனியை உண்டாய்!
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்!

(வினாயகனே)

குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரி:
இசை:

ராகம்: கீரவாணி
தாளம்:

முதல்வனுக்கு முதல் வணக்கம்!

ஒவ்வொரு குழு வலைப்பூ துவங்கும் போதும் கணபதியானை முன்னிட்டு, முதல் வணக்கம் இட்டுத் தான் துவங்குவோம்! ஆனால் அவனுக்கு என்று தனியான ஒரு வலைப்பூ இது வரை தோன்றவில்லை! பிள்ளையார் சதுர்த்தி அன்று கைலாஷி ஐயா, தமது வலைச்சரப் பதிவில் இதைச் சற்று ஏக்கத்துடன் குறிப்பிட்டு இருந்தார்!

அவர் ஏக்கத்தைப் புரட்டாசியில் புரட்டிப் போட வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் போலும்! இதோ விநாயகப் பெருமானுக்கு என்று தனியானதொரு பாடல் வலைப்பூ! - பிள்ளையார் பாட்டு!

இன்று மகா சங்கட ஹர சதுர்த்தி!
இன்றே செய்வோம்! நன்றே செய்வோம்! யானைக் கன்றே செய்வோம்!

முதல்வனுக்கு முதல் வணக்கம்!