Saturday, October 11, 2008

பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர்







இந்த பாடல் கவியரசர் கண்ணதாசன் இயற்றியது, கண்ணதாசன் செட்டிநாட்டுக்காரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பிள்ளையார் சுயம்புவாய் ஒரு குகையில் எழுந்தருளியுள்ள பிள்ளையார்பட்டியும் செட்டிநாட்டிலே உள்ளது ஆகவே தனது அனுபவத்தை கண்ணதாசன் இப்பாட்டில் கூறுகின்றார்.



அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத்
திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து
பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை.

பிள்ளையார் பட்டி என்னும்
பேரருள் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையில் பூத்த
உருவத்தின் இயற்கைத் தோன்றல்
தெள்ளிய மனத்தர்க்கு எல்லாம்
திருவருள் வழங்கும் தெய்வம்
கள்ளமில் பக்தர் தந்தை
கற்பக மூர்த்தி போற்றி. - கவிஞர் கண்ணதாசன்

பிள்ளையார்பட்டி உற்சவர்


இயற்கையாக குகையில் தோன்றியுள்ள கற்பக விநாயகர் வலம் புரி விநாயகர் ( அதாவது தும்பிக்கை வலப்புறம் வளைந்துள்ளது). அவர் கற்பக விருட்சமாய் நமது துன்பங்களை துடைத்து எல்லா நலன்களையும் வழங்குவார் அவர் தாள் பணிவோம்.
************************

அன்பர்களே, KRS அவர்களுக்கு பல ஆயிரம் நன்றிகள், பிள்ளையார் சதுர்த்தியன்று முருகன், அம்பாள், சிவன், கண்ணன் பாட்டுகள் உள்ளது போல் பிள்ளையாருக்கும் பாட்டு துவங்கலாம் என்றவுடன் அதை செயல்படுத்தியதற்காக.

விருப்பம் உள்ள அன்பர்கள் அனைவரும் ( குறிப்பாக விநாயகர் அகவல் எழுதி வரும் VSK ஐயா, கணபதி ராயன் புகழைக்கூறிய கீதாம்மா ( அம்மா தங்கள் spondilytis சீக்கிரம் குணமாக அந்த பிள்ளையாரிடம் பிரார்த்திக்கின்றேன்), கவிநயா ஆகியோர்களையும் கை கூப்பி அழைக்கின்றேன். வந்து கலந்து கொள்ளுங்கள்.

1 comment:

Unknown said...

Omkara Vadivae
Neenkatha Thunaiyaaha
Nee Irunthu Arulsei Swami